எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் கைது


எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் வாலிபர் கைது
x

எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கைது செய்தனர்.

சென்னை

சென்னை:

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் தலைமையில் ரெயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நடைமேடை 5-இல் சந்தேகப்படும் படியாக ஒருவர் நின்று கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனடியாக அவரை பிடித்த போலீசார், அவரது பையை சோதனையிட்டனர்.

அப்போது அவர் வைத்திருந்த பையில் 8 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அவர் செங்கோட்டை மாவட்டம் புளியரை பகுதியை சேர்ந்த அனுராக்(வயது 26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்த கஞ்சா பொட்டலங்களை போதைபொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தனர்.


Next Story