தாயை தாக்கிய மகன் கைது

பாளையங்கோட்டை அருகே தாயை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்தவர் ராணி (வயது 60). இவருடைய மகன் ஜஸ்டின் கோபிநாத் (33). இவர் ராணியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு ராணி பணம் கொடுக்காததால் அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராணி பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜஸ்டின் கோபிநாத்தை நேற்று கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





