பெற்றோரை தாக்கிய மகன் கைது


பெற்றோரை தாக்கிய மகன் கைது
x

சொத்து பிரச்சினையில் பெற்றோரை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி மடத்துப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை (வயது 90). இவருடைய மனைவி ஏசுவடியாள் (85). இவர்களின் மகன்கள் பால்ராஜ், ஆபிரகாம்.

ஆபிரகாம் சொத்துகளை பிரித்து தர கேட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில் பால்ராஜின் மனைவியிடம் ஆபிரகாம் தகராறு செய்து உள்ளார். இதனை கோவில்பிள்ளை, ஏசுவடியாள் ஆகியோர் தட்டிக்கேட்டு உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஆபிரகாம், பெற்றோரிடம் தகராறு செய்து அவர்களை தாக்கினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆபிரகாமை கைது செய்தனர்.


Next Story