விரைவில் நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு


விரைவில் நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
x

விரைவில் நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தஞ்சை,

தஞ்சை தொழில் வர்த்தக சங்கம் சார்பில் அரையாண்டு பொதுக்குழு மற்றும் சிறப்பு கூட்டத்தில் சந்திரயான்-1 திட்ட இயக்குனரும், விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்தியாவில் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் செயற்கைக்கோள் அனுப்பும் பணி தொடங்கப்பட்டது. இத்துறையில் இந்தியா தற்போது படிப்படியாக முன்னேறி இன்று உலக அளவில் முன்னணியில் உள்ள 3 நாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. நிலவுக்கு இதுவரை 3 முறை விண்கலனை அனுப்பியுள்ளோம். நிலவில் உள்ள கனிம வளத்தை அடுத்த 3, 4 ஆண்டுகளில் ஆய்வு செய்ய வாய்ப்புள்ளது.

பூமிக்கு தேவையான கனிமவளத்தை நிலவில் இருந்து இன்னும் 10 ஆண்டுகளில் கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. முன்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு அதிக செலவு ஏற்பட்டது. இப்போது குறைந்த செலவில் செயற்கைக்கோளை ஏவும் நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளது. மேலும் ஆண்டுக்கு ஆண்டு செயற்றைகோள் அனுப்புவது அதிகரித்து வருகிறது.சர்வதேச அளவில் 2021-ல் 1,200 செயற்கைக்கோள்களும், 22-ம் ஆண்டு 2,300-ம், நடப்பு ஆண்டு 3 ஆயிரம் செயற்கைகோள்களும் அனுப்பப்பட்டுள்ளது.

விரைவில் நாள்தோறும் செயற்கைக்கோள் ஏவும் நிலை வரும். செயற்கைக்கோளை சிக்கனமான செலவில் விண்ணுக்கு அனுப்புவதில் இந்தியாவுக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையே போட்டி நிலவுகிறது. எலான் மஸ்கை விட குறைந்த செலவில் செயற்கைக்கோளை அனுப்புவதற்கு குலசேகரபட்டினம் மண் உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story