எஸ்.பி.வேலுமணி வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்றம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


எஸ்.பி.வேலுமணி வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்றம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

எம்.பி. எம்.எல்.ஏ. ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம் செய்து பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.

சென்னை,

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பணிகளின் டெண்டர்களை தனக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஐகோர்ட்டில் 2018-ம் ஆண்டு வழக்குகள் தொடரப்பட்டன ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர், சென்னை மற்றும் கோவையில் தலா ஒரு வழக்கு என 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டன. அந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால் பொறுப்புத் தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் இன்று வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.அதன்படி இந்த நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் எஸ்.பி.வேலுமணி வழக்கில் எம்.பி. எம்.எல்.ஏ. ஆகியோர் மீதான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றம் செய்து ,சம்பந்தப்பட்ட அமர்வில் முறையீடுமாறு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டனர்.


Next Story