ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்


ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
x

ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், நெய், சந்தனம், தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோலதலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி பக்த வைராக்கிய ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

1 More update

Next Story