அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

நொய்யலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், பழம், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதேபோல், சேமங்கி, அத்திப்பாளையம், புன்னம், திருக்காடுதுறை, கரியாம்பட்டி, குந்தாணிபாளையம் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story