முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்


முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
x

முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே பாலமலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், விபூதி உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வேலாயுதம்பாளையத்தில் உள்ள புகழிமலை பாலசுப்பிரமணியர் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு, பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இதையடுத்து பக்தர்கள் மலையை சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நன்செய் புகழூர், காகிதபுரம், பவித்திரம், பாலமலை, வெண்ணெய்மலை உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story