நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு முகாம்

நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் நிலுவையில் உள்ள நில அபகரிப்பு சம்பந்தமான மனுக்களை விரைந்து முடிப்பதற்காக கலெக்டர் கார்த்திகேயன், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெற்றது.
உதவி கலெக்டர் தமிழரசி, தாசில்தார் பகவதி பெருமாள், துணை தாசில்தார் சரவணன் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சாவித்திரி, தனலட்சுமி, முருகன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் நிலுவையில் உள்ள நிலஅபகரிப்பு தொடர்பான மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு 20 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Related Tags :
Next Story






