சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

கரூர்

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்றனர். பின்னர் வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள்,நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை செய்தனர். தொடர்ந்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு, உடல் பரிசோதனை, தலைவலி, காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

1 More update

Next Story