சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் லதா நரசிம்மன் முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி துணைத்தலைவர் தீபிகா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 200-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, கண் பரிசோதனை, தோல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் டாக்டர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story