1-ந் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


1-ந் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

வருகிற 1-ந் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

மதுரை,

உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சின்னமனூரில் அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம்.

இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும். மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கும் முன்பும் பாதிப்பு இருக்கும். அனைத்துத்துறை செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு மருத்துவ முகாம்கள்

கடந்த 2012-ல் 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் ஏற்பட்டது. 2017-ல் 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 65 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 476 மருத்துவ குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவ குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வருகிற 1-ந் தேதி தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

உணவு பாதுகாப்பு துறை சார்பாக பெரிய உணவகங்களை தவிர சிறிய உணவகங்களில் மட்டுமே சோதனை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு தவறானது. எந்த கடையில் பாதுகாப்பற்ற முறையில் உணவு விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாகும். எங்கு தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028-ம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

இவர் அவர் கூறினார்.


Next Story