அதியமான்கோட்டைதட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


அதியமான்கோட்டைதட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 23 Sept 2023 1:00 AM IST (Updated: 23 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் மற்றும் லட்சார்ச்சனை வழிபாடு நடைபெற்றது. பின்னர் உபகார பூஜைகளும், மூலவருக்கு சிறப்பு அலங்கார சேவையும் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் வளர்பிறை அஷ்டமி ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம், கோவில் அர்ச்சகர் கிருபாகரன் குருக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

1 More update

Next Story