மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை


தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

சிவகங்கை

திருப்புவனம்

மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆனி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பத்திரகாளி அம்மன் கோவில்

திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற தினங்களில் அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெறும்.

மேலும் தமிழ், ஆங்கில வருடபிறப்புக்கள் மற்றும் ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று பத்திரகாளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சன பொடி, உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் செய்தும் பின்பு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்படும்.

சிறப்பு வழிபாடு

இந்நிலையில் நேற்று ஆனி மாத வெள்ளிக்கிழமையைெயாட்டி மடப்புரம் பத்திரகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். சிலர் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபட்டனர்.

பின்பு மதிய உச்சிக்கால பூஜையின் போது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். உச்சிக்கால பூஜையின் போது பத்திரகாளி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் மாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story