அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரூர்

வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நேற்று கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி வாராகி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வாராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன், வேலாயுதம்பாளையம் மகா மாரியம்மன் கோவில் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story