விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை


விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை
x

விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

கரூர்

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஆவணி மாத சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், விபூதி உள்பட 16 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

நொய்யல் அருகே முத்தனூர் வருணகணபதி கோவிலில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல ெநாய்யல், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story