அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்


அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
x

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள சத்திரப்பட்டியில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், சந்தனம், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல தாயில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில், கோட்டையூர் சக்தி மாரியம்மன் கோவில், வெற்றிலையூரணி காளியம்மன் கோவில், வனமூர்த்திலிங்கபுரம் காளியம்மன் கோவில், ஏழாயிரம்பண்ணை சீர்காச்சி பத்திரகாளி அம்மன் கோவில், கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், பாறைப்பட்டி முப்பிடாதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story