காலபைரவருக்கு சிறப்பு பூஜை


காலபைரவருக்கு சிறப்பு பூஜை
x

நாமக்கல் மாவட்டத்தில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

தேய்பிறை அஷ்டமி

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோவில், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோயவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அசலதீபேஸ்வரர்

மோகனூர் காவிரியாற்றங்கரையில் மதுக்கரவேணி அம்பாள் சமேத அசலதீபேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி இங்கு தனி சன்னதியில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாக கேள்விகள் நடைபெற்று தொடர்ந்து காலபைரவருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், பச்சரிசி மாவு, மஞ்சள், சந்தனம், விபூதி, கலச தீர்த்தம் கொண்டு அபிஷேகமும் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து வில்வம், செவ்வரளி கொண்டு அர்ச்சனை செய்து ஆராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெண்பூசணி மற்றும் தேங்காயால் தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story