நவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை

குடவாசல் குபேர சாய்பாபா கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைக்கு சிறப்பு பூஜை நடந்தது.
குடவாசல் குபேர சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. நவராத்திரியையொட்டி தினமும் குபேர சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று நவராத்திரி 7-ம் நாள் நிகழ்ச்சியில் சாய்பாபாவிற்கு ஆராதனைகள் நடைபெற்று, கோவிலில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சிவசங்கரன் செய்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





