ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள்...!


ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள்...!
x

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடி கிருத்திகை ஒரு விஷேச நாளாக நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்தநிலையில் பக்தர்கள் வசதிக்காக அரக்கோணம் - திருத்தணி இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் நாளை முதல் 11-ந்தேதி வரை 3 நாட்கள் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story