அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x

அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

கரியாம்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி 3-ம் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் குந்தாணி பாளையம் நத்தமேடு, புன்னம், நஞ்சை புகழூர் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story