சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:46 PM GMT)

திருக்கடையூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது

மயிலாடுதுறை

திருக்கடையூர்:

திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சித்திரை மாத வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி சீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அமிர்த சாய் அறக்கட்டளை மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story