விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு


விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கரூர்

நொய்யல் அருகே புன்னத்தில் புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. அதேபோல் முத்தனூரில். சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், அத்திப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வேலாயுதம்பாளையம் கடைவீதியில் செல்வ விநாயகர் கோவிலில் தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதேபோல் காகிதபுரம், புகழிமலை, ஈ.ஐ.டி பாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story