முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணியர் சுவாமி, பாலமலை பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story