கோவில்களில் சிறப்பு வழிபாடு


கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

நாமக்கல் மாவட்டத்தில் ஆனி மாத சனி பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல்

சனி பிரதோஷம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆனி மாத சனி பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பரமத்திவேலூர் காவிரி கரையில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர், பொத்தனூரில் உள்ள காசிவிஸ்வநாதர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் உள்ள பருவதீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் உள்ள சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கு ஆனி மாத சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நந்தி பகாவன்

மோகனூர் காவிரி ஆற்றங்கரையோரத்தில் உள்ள அசலதீபேஸ்வரர் கோவிலில் ஆனி மகா சனி பிரதோஷத்தையொட்டி சிறப்பு யாகம் செய்து அசலதீபேஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் நீர், கரும்புச்சாறு உள்பட பல்வேறு அபிஷேக ஆராதனையும், நந்தி பகவானுக்கு மலர் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் மோகனூர் அடுத்துள்ள மணப்பள்ளி பீமேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதபுரீஸ்வரர்

நாமக்கல்-மோகனூர் சாலை ஆசிரியர் காலனியில் கல்வி விநாயகர் கோவில் உள்ளது. சனி பிரதோஷத்தையொட்டி இந்த கோவிலில் வீற்றிருக்கும் வேதபுரீஸ்வரர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஆனி மாதம் சனி பிரதோஷத்தையொட்டி நாமகிரிப்பேட்டை பெருமாள் கோவில், வீரபத்திர சாமி கோவில்களில் உள்ள ஈஸ்வரன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. மேலும் சீராப்பள்ளியில் கோவிலிலும் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story