அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு


அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு  கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கரூர்

புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாயகி கோவிலில் நேற்று அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு புன்னைவன நாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில், திருக்காடுத்துறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அக்னி நட்சத்திரம் நிவர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story