கிருஷ்ணகிரியில்பள்ளி மாணவர்களுக்கு சரக அளவிலான தடகள போட்டிகள்


கிருஷ்ணகிரியில்பள்ளி மாணவர்களுக்கு சரக அளவிலான தடகள போட்டிகள்
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவர்களுக்கு சரக அளவிலான தடகள போட்டிகள் நடந்தது.

தடகள போட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மகராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் சரக அளவிலான தடகள போட்டிகள் நேற்று தொடங்கியது. உதவி திட்ட அலுவலர் வடிவேல் போட்டியை தொடங்கி வைத்தார்.

மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார். 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1,238 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நீளம் தாண்டுதல்

இதில் 100, 200, 400, 800, 1,500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்போட்டிகள், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முனை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், கோலூன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மகராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பார்த்தீபன் செய்துள்ளார். இதில் மகாராஜகடை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ரோஸ்லின், பெற்றோர் சங்கத்தலைவர் வஜீர், பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் கவிதா உள்பட பலர் கலந்து கொண்டன


Next Story