காஞ்சீபுரம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி


காஞ்சீபுரம் மாவட்டத்தில்  முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
x

பொது பிரிவினருக்கான தடகள, கபடி, கையுந்துபந்து போன்ற விளையாட்டு போட்டிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 8.2.2023 முதல் 22.2.2023 வரை பொதுப்பிரிவு பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் என இருபாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், ஹாக்கி, மேசை பந்தாட்டம், நீச்சல் போட்டி, கிரிக்கெட், தடகள போட்டி, டென்னிஸ், செஸ் போன்ற 43 வகையான போட்டிகள் காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று பொது பிரிவினருக்கான தடகள, கபடி, கையுந்துபந்து போன்ற விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story