அமைச்சு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி


அமைச்சு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி
x

அமைச்சு பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் 62-வது தமிழ்நாடு மாநில காவல்துறை அமைச்சு பணியாளர்களுக்கான மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கபடி, கைப்பந்து உள்ளிட்ட 28 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் மேற்கு மண்டலம் உள்பட அனைத்து மண்டலங்களில் இருந்தும் 1,400 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.


Next Story