ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை


ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
x

கோப்புப்படம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம்,

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து, 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கச்சத்தீவு- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் 15 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் விடுதலை செய்யப்பட்டு இன்னும் நாடு திரும்பாதநிலையில், மீண்டும் 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story