ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


ஸ்ரீரங்கம்: வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 7-ம் நாள் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் 7-ம் நாளான இன்று நம்பெருமாள் முத்துரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து ரத்தின அபயஹஸ்தம், வெண்பட்டுடனான அங்கி உள்ளிட்ட சர்வாலங்காரங்களோடு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story