புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி


புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 19 Jun 2023 8:30 PM GMT (Updated: 19 Jun 2023 8:30 PM GMT)

குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

நீலகிரி

குன்னூர்

குன்னூரில் புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டு திருப்பலி

குன்னூரில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயம் 137 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது ஆகும். ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 4-ந் தேதி கூட்டு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் திருப்பலி, மறையுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

திருவிழாவையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது இரவில் ஜொலித்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் நீலகிரி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் அட்டடி ஆலய பங்கு தந்தை வில்லியம், திருத்தல பங்கு தந்தை ஜெயக்குமார், உதவி பங்கு தந்தை ஆன்டோ மெல்டாஸ் ராக் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

தேர் பவனி

இதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நடந்தது. புனித அந்தோணியார் ஆலயம் போல தேர் அலங்கரிக்கப்பட்டு, அதில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு இருந்தது. தேர் பவனி ஆலயத்தில் இருந்து தொடங்கி மவுண்ட் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் தேர் பவனி வரும் வழியில் நீண்ட வரிசையில் நின்று பாடல்கள் பாடியும், பிரார்த்தனை செய்த படியும் வந்தனர். மேலும் வழிநெடுகிலும் வாகன ஓட்டுநர்கள் சார்பில், அந்தோணியார் சொரூபம் வைத்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது.


Next Story