உப்பு உற்பத்தி தொடக்கம்


உப்பு உற்பத்தி தொடக்கம்
x

வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி தொடக்கம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி ஆண்டுதோறும் நடக்கிறது. கடந்த வாரம் பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் உப்பள தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். தற்போது வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கியது. இந்த பணியில் உப்பள தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story