மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்: பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன்


மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்: பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன்
x

மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் பியர்லஸ் பைட்டர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

திருச்சி

பெண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் வகையில் திருச்சியில் மாநில அளவிலான எல்.எஸ்.எப். பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து சிறந்த 8 அணிகள் கலந்து கொண்டன. பிஷப் ஹீபர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பியர்லஸ் பைட்டர்ஸ் அணியும், எஸ்.டி.ஜி. அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த எஸ்.டி.ஜி. அணி 28 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பியர்லஸ் பைட்டர்ஸ் அணி 24.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் திருச்சி-தஞ்சை மறைமாவட்ட பேராயர் சந்திரசேகரன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இதில் போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ், லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story