விருத்தாசலத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை


விருத்தாசலத்தில் மாணவி விஷம் குடித்து தற்கொலை
x

விருத்தாசலத்தில் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பாலாம்பிகை தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவருடைய மகள் பிரியதர்ஷினி(வயது 17). இவா் விருத்தாசலம் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி பிரியதர்ஷினி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினி உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story