கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x

உத்தனப்பள்ளி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

பள்ளி மாணவன்

உத்தனப்பள்ளி அருகே உள்ள கண்ணசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் அப்போஜியப்பா. இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 17). உத்தனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான். விடுமுறை நாளான நேற்று மாணவன் நண்பர்கள் சிலருடன் உத்தனப்பள்ளி அருகே உள்ள சசிதரன் என்பவரது கிணற்றில் குளிக்க சென்றான்.

அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் தண்ணீரில் மூழ்கினான். நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டான். இதுகுறித்து மாணவனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து ராயக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், உத்தனப்பள்ளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீ்ட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். தொடர்ந்து மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக மாணவனின் உறவினர் சிவராஜ் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story