கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு


கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
x

ஓசூர் சிப்காட்டில் கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

பள்ளி மாணவன்

வேலூர் மாவட்டம் ஒங்கம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் பரத் (வயது 16). இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகேப்பள்ளி எழில் நகரில் தங்கி இருந்தனர். பரத் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு முடித்துள்ளான்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் பரத் ஓசூர் சிப்காட் சரஸ்வதி லேஅவுட் பக்கமாக நடந்து சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மாணவனை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் பரத் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டான்.

விசாரணை

இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கால்வாயில் தவறி விழுந்து பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story