மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி


மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
x
தினத்தந்தி 2 May 2023 7:00 PM GMT (Updated: 2 May 2023 7:01 PM GMT)

பழனி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியானார்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பாலசமுத்திரம் பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகன் முகமது ஹர்ஷத் (வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது அவர் பொதுத்தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று அவர், தனது நண்பருடன் அதே பகுதியில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்காக அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story