மாணவர்கள் குறைதீர்க்கும் கருத்தரங்கு


மாணவர்கள் குறைதீர்க்கும் கருத்தரங்கு
x

தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் மாணவர்கள் குறைதீர்க்கும் கருத்தரங்கு நடைபெற்றது.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் மாணவர்கள் குறைதீர்க்கும் மன்றம் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. மன்ற ஒருங்கிணைப்பாளர் லதா வரவேற்றார். முதல்வர் மேஜர் து.ராஜன் தலைமை தாங்கினார். .நாகர்கோவில் எஸ்.டி. இந்து கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மீனா சமூகவலை தளங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். சகாய தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மன்றத்தின் உறுப்பினர்களான ராஜேஸ்வரி, மேரி பெர்னார்டு, ஷோபா, செல்வராணி, புனிதா, கோகிலவாணி மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் கல்லூரியின் சான்றோர் ஆய்வு மையம் மற்றும் சம வாய்ப்பு மையம் இணைந்து சான்றோரும் சமநிலை உணர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார், தமிழ்த்துறைத் தலைவர் நிர்மலா, தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு தலைவர் கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்திய விமானப் பாதுகாப்புத்துறை மண்டல ஒருங்கிணைப்பாளர் காமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முடிவில், சம வாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி நன்றி கூறினார்.


Next Story