மாணவி சத்தியாவை ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்


மாணவி சத்தியாவை ரெயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தது ஏன்? சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்
x

சத்யப்பிரியா இறந்து விடுவார் என நான் நினைக்கவில்லை என பரங்கிமலை கொலை வழக்கில் கைதான சதீஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 13ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை ரெயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார். சத்யா கொலையில் கைது செய்யப்பட்ட சதீஷை, காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறை விசாரணையில் சதீஷ் அளித்த வாக்குமூலத்தில்,

சத்யாவை 2 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நான் படிக்கவில்லை என்பதற்காகவோ, வேலைக்கு செல்லவில்லை என்பதற்காகவோ சத்யா ஒருபோது என்னிடம் கோபித்து கொண்டதே இல்லை.

நான் சத்யாவுடன் பழகுவதை பிடிக்காத, அவரது தாயார் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்தார். இதன் காரணமாக சத்யா என்னிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

நாள்தோறும் சத்யாவைக் கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து சென்றும், பிறகு கொல்ல மனமில்லாமல் 10 நாள்களாக சத்யாவை பின்தொடர்ந்து சென்றுவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.

சத்யாவை பலமுறை பேச தொடர்பு கொண்டபோதும், அவர் பேசாத ஆத்திரத்தில் ரெயில் முன் தள்ளிவிட்டேன். சத்யப்பிரியா இறந்து விடுவார் என நான் நினைக்கவில்லை என சதீஷ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story