தேசிய அளவிலான போட்டியில் வெற்றி:சாரணிய மாணவிகளுக்கு பாராட்டு


தேசிய அளவிலான போட்டியில் வெற்றி:சாரணிய மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 5 March 2023 7:00 PM GMT (Updated: 5 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

அரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான சாரண, சாரணியர் பயிற்சி முகாம் 5 நாட்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அணியில் தர்மபுரி மாவட்டம் அரூர் மற்றும் பாலக்கோடு கல்வி மாவட்டத்தை சேர்ந்த சாரண, சாரணியர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் சாரண, சாரணியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாறுவேட போட்டி, பேஷன் டிரஸ் போட்டி, நாடகம், நடனங்களுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 6 பேர் பேஷன் டிரஸ் போட்டி மற்றும் நடனத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story