மாணவர்கள்விழிப்புணர்வு பேரணி

உடன்குடி பகுதியில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
உடன்குடி:
உடன்குடி அருகிலுள்ள தருமபுரி, சங்கரலிங்கபுரம், பூலோகபாண்டிவிளை, கீழராமசாமியாபுரம், ஆரோக்கியபுரம், பகுதியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி சென்றனர். பேரணியில் ஆசிரியர்கள் செல்வகுமார், அல்பர்ட் இருதயராஜ, பூங்கொடி, அழகுமணி, ரோஸ்லின்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர் சாந்தி செய்திருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





