காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்


காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்
x

காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

தரகம்பட்டியில் உள்ள கடவூர் வட்டார அலுவலகத்தில் காவிரி கூட்டு குடிநீர் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி தலைமை தாங்கினார். கடவூர் வட்டாட்சியர் முனிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கடவூர் ஒன்றிய பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளில் குறைபாடுகள் இருப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்றன. அப்போது, அனைத்து பகுதிகளுக்கும் தேவையான குடிநீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதில், கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், வடக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் நந்தினிதேவி, கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஜெகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story