ஓசூரில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


ஓசூரில்இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலைதுணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x
தினத்தந்தி 26 Aug 2023 7:30 PM GMT (Updated: 26 Aug 2023 7:30 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுப்பழக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலை கே.சி.சி. நகரை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மனைவி தீபிகா (27). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் ராம்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதன்படி கடந்த 24-ந் தேதி அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

விசாரணை

இதனால் மனமுடைந்த தீபிகா வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுகுறித்து ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story