கொத்தனார் திடீர் சாவு


கொத்தனார் திடீர் சாவு
x
தினத்தந்தி 10 July 2023 6:45 PM GMT (Updated: 10 July 2023 6:46 PM GMT)

திருவேங்கடம் அருகே கொத்தனார் திடீரென இறந்தார்.

தென்காசி

திருவேங்கடம்:

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை அடுத்துள்ள ஓடைக்கரைபட்டியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 50). தொழில் நிமித்தம் காரணமாக திருவேங்கடம் அடுத்துள்ள காசிலிங்கபுரம் கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேறி திருவேங்கட பகுதியில் கொத்தனார் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் திருவேங்கடம் வந்துவிட்டு ஊருக்கு செல்லும்போது திருவேங்கடம் அடுத்துள்ள குறிஞ்சாக்குளம் சேவை மைய கட்டிடத்தில் படுத்துள்ளார்.

பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனை கண்டு அக்கம் பக்கத்தினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் வந்து எழுப்பிய போதும் அய்யாசாமி எழுந்திரிக்கவில்லை. அவர் ஏற்கனவே படுத்த நிலையிலே உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவேங்கடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் மற்றும் போலீசார் வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story