தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டம்


தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டம்
x

தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டம் நடத்தினர்.

திருச்சி

மணப்பாறை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 69 பேர் பணியாற்றி வருகின்றனர். அந்த பணியாளர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளான தூய்மை பணியாளர்கள் இதுகுறித்து தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து நகராட்சி அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஊதியம் விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிகளுக்கு புறப்பட்டுச் சென்றனர். மேலும் போராட்டத்தின் போது, தூய்மைப் பணியில் ஈடுபடும் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கிட வேண்டும், ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Related Tags :
Next Story