சாலை விரிவாக்க பணியால் அவதி

சாலை விரிவாக்க பணியால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரியலூர் குரும்பன் சாவடி, தாமரைக் குளம், ஓட்ட கோவில், பொய்யாத நல்லூர், கட்டையன் குடிகாடு, ராயபுரம் ஆகிய கிராமங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு சில இடங்களில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் தார் சாலை அமைப்பதற்கு ஜல்லி கற்கள் மற்றும் சிமெண்டு கலவைகள் கொட்டப்பட்டுள்ளது.இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது அதிக அளவில் புழுதி பறக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





