மகனுடன் தகராறுகே.ஆர்.பி. அணையில் குதித்து பெண் தற்கொலை


மகனுடன் தகராறுகே.ஆர்.பி. அணையில் குதித்து பெண் தற்கொலை
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

மகனுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்ெகாலை செய்து கொண்டார்.

மகனுடன் தகராறு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை குரும்பகுட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி லலிதா (வயது 50). இவர்களது மகன் விநாயகம். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் தினமும் அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

சம்பவத்தன்றும் விநாயகம் மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்று தனது தாயார் லலிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி கிருஷ்ணகிரி அணைக்கு வந்துள்ளார். மகன் தினமும் மது குடித்து விட்டு வந்து தகராறு செய்த விரக்தியில் லலிதா கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விசாரணை

இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து அணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று தீயணைப்பு படையினர் உதவியுடன் லலிதாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story