தர்மபுரியில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


தர்மபுரியில்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 Sept 2023 12:30 AM IST (Updated: 1 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 59). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மகன், மகள்கள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் காளியப்பன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார். அண்மையில் கீழே தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தன்னுடன் யாரும் இல்லை என காளியப்பன் மன வேதனையில் இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வீட்டில் உள்ள ஒரு அறையில் காளியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story