தொப்பூர் அருகேலாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


தொப்பூர் அருகேலாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 19 Oct 2023 7:00 PM GMT (Updated: 19 Oct 2023 7:00 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள முத்து பூசாரியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 51). லாரி டிரைவர். இவருடைய மனைவி வனிதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 3 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து விட்டு பன்னீர்செல்வம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்த பன்னீர்செல்வம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story